/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
/
திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகரிப்பு
ADDED : டிச 07, 2024 01:26 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம்திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில், 20க்கும் மேற்பட்ட பன்றிகள், பெரும்பாக்கம் செல்லும் சாலையோரம் உள்ள கருவேல மரங்கள் உள்ள பகுதியில் தஞ்சமடைந்து உள்ளன.
உணவுக்காக வெளியே வரும் பன்றிகள், சாலையோரம் கிடக்கும் குப்பையை கிளறுகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி, பழச்செடிகளை நாசப்படுத்துகின்றன. சாலையில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் பன்றிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்ப டுத்துவதோடு, விபத்து ஏற்படுத்தி வாகன ஓட்டி களுக்கு தொல்லை கொடுக்கும் பன்றிகளை பிடித்து, வனப்பகுதியில் விட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.