sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்

/

நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்

நெல் கொள்முதல் நிலையம் எடமச்சியில் அமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 29, 2025 06:43 PM

Google News

ADDED : மார் 29, 2025 06:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள், 2,000 ஏக்கர் பரப்பளவில், நவரை பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இதற்கான அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நீண்ட தூரம் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க, விவசாயிகள் துறை அதிகாரிகளிடம், நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எடமச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us