/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை தொட்டியில் குடிநீர் நிரப்ப வலியுறுத்தல்
/
கால்நடை தொட்டியில் குடிநீர் நிரப்ப வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 01:58 AM

கீழ்கதிர்பூர்:கால்நடை தொட்டியில் முறையாக தண்ணீர் நிரப்ப, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூரில் ஊராட்சியில், கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், 20,000 ரூபாய் செலவில், 2019ல், குடிநீர் குழாயுடன், கால்நடை தொட்டி கட்டப்பட்டது.
மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் தொட்டியில் தேக்கி வைக்கப்படும் குடிநீரை பருகி வந்தன. இந்நிலையில், தொட்டியில் முறையாக குடிநீர் நிரப்பாததால், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், தாகத்துடன் திரும்பி செல்கின்றன.
எனவே, கால்நடை தொட்டியில் முறையாக தண்ணீர் நிரப்ப ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.