sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

/

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சுகாதார வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 08, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இப்பகுதியில், 1999ல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறை, குளியல் அறை, துணி துவைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டு இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார், 10 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.

மின்மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

எனவே, சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, முறையாக பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேதாஜி நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுகாதார வளாகம் கட்டப்பட்டு, 26 ஆண்டுகள் ஆவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தபின், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us