/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
வேகவதி ஆற்று பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 21, 2024 02:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே செல்லும் வேகவதி ஆற்றின் குறுக்கே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரைப்பாலம், 2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாலம் சேதமானது.
இப்பாலம் சேதமானதால், தாட்டித்தோப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இரண்டு கி.மீ.,துாரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து, மூலதன மானிய திட்டம் 2022 - -23ன்கீழ், 2.29 கோடி ரூபாய் மதிப்பில், கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க, 2023ம் ஆண்டு, ஜூலை மாதம் பூமி பூஜை போடப்பட்டது.
பூமி பூஜை போடப்பட்டு ஒரு ஆண்டுக்குப்பின், தாமதமாக கடந்த ஜூலை மாதம், பாலம் கட்டுமானப் பணி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
கன்னிகாபுரம் - தாட்டித்தோப்பு இடையே வேகவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமானப் பணி தற்போது 50 சதவீதம் முடிந்துள்ளது. அவ்வப்போது பெய்த மழையால் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழைக்கு, வேகவதி ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருந்தால், வரும் ஜனவரி மாதத்திற்குள் பாலம் கட்டும் பணியை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு பணியை தீவிரப்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

