/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்று கால்வாயில் பாலம் அரும்புலியூர் ஏரியில் பணி தீவிரம்
/
பாலாற்று கால்வாயில் பாலம் அரும்புலியூர் ஏரியில் பணி தீவிரம்
பாலாற்று கால்வாயில் பாலம் அரும்புலியூர் ஏரியில் பணி தீவிரம்
பாலாற்று கால்வாயில் பாலம் அரும்புலியூர் ஏரியில் பணி தீவிரம்
ADDED : பிப் 26, 2024 04:44 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கு, பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து, தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய், அரும்புலியூர் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நீர்வரத்து கால்வாய் இணைப்பாக பினாயூர் சாலையில் தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரைபாலம், சில ஆண்டுகளுக்கு முன் சேதம் அடைந்தது. மேலும், இந்தப் பாலத்தின் தரைதளம் கால்வாய் உயரத்தை காட்டிலும் மேடாக காணப்படுகிறது.
இதனால், பாலாற்றில் இருந்து, அரும்புலியூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், தரைபாலம் பகுதியில் தடைபட்டு தேங்கி நிற்கும்நிலை ஏற்படுகிறது.
எனவே, சேதம் அடைந்த இந்த தரைபாலத்தை இடித்து கால்வாய் அளவிற்கு சமமாக அமைப்பதோடு, பாலத்தை உயரமாக அமைக்க அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி, பினாயூர் சாலையில் உள்ள அரும்புலியூர் ஏரி கால்வாய் இணைப்பு பாலத்தை புதியதாக கட்ட நபார்டு நிதியின்கீழ், 2.63 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் அதற்கான பணி துவங்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடைபெறுகிறது.

