sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்தவர்களிடம் விசாரணை

/

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்தவர்களிடம் விசாரணை

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்தவர்களிடம் விசாரணை

அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்தவர்களிடம் விசாரணை


ADDED : மார் 24, 2025 12:57 AM

Google News

ADDED : மார் 24, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தில், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனுமதியின்றி அம்பேத்கர் முழு உருவச் சிலையை வைத்துள்ளனர்.

தகவலறிந்த உத்திரமேரூர் வருவாய் துறையினர், நேற்று காலை, சம்பவ இடத்திற்கு சென்று, சிலை வைத்தவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். பின், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்ற, வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்தோர் சிலையை அகற்றி விடுவதாக தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய் துறையினர் துணியால் சிலையை மூடினர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, இரண்டு ஆண்டுக்கு முன், இதே பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க அப்பகுதியினர் முயன்றபோது, வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us