/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கூட்டுறவு பட்டயப்பயிற்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 27, 2025 05:32 AM
காஞ்சிபுரம்: கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், பழைய பாட திட்டத்திற்கு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பு:
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில், 2002ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை முழு நேரம் மற்றும் அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப் பயிற்சி நடந்தது.
புதிய பாட திட்டம் துவங்கி, இரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதால், பழைய பாட திட்டங்கள் முடிவு கட்டப்பட உள்ளது.
இதனால், பழைய பாடதிட்டத்தின் படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துணைத் தேர்வு நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.
எனவே, பழைய பாடதிட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு, இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ; பத்தாம் வகுப்பு; பிளஸ் 2 மதிப்பெண் நகல்; இறுதி தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டு நகல்; தேர்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தொகையுடன் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
துணை தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பங்கேற்காதவர்கள் புதிய பாட திட்டத்தின் படி படித்தால் மட்டுமே, கூட்டுறவு பட்டய சான்று வழங்கப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் 044 - -2723 7699 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

