/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் ஒயரை உடலில் சுற்றி ஐ.டி., ஊழியர் தற்கொலை
/
மின் ஒயரை உடலில் சுற்றி ஐ.டி., ஊழியர் தற்கொலை
ADDED : செப் 22, 2024 05:33 AM
திருப்போரூர் : செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 50.
பல்லாவரம் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ஜெயராணி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கார்த்திகேயன், வீட்டின் ஓர் அறையில் உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார்.
பின், மின்சார ஒயரை சுவிட்ச் பாக்சில் சொருகி, அதை உடலுடன் சுற்றிக்கொண்டு, சுவிட்சை ஆன் செய்துள்ளார். இதில், உடலில் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
மற்றொரு அறையில் இருந்த மனைவி வந்து பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டு இருந்தது. அருகே இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கார்த்திகேயன் மயங்கிக் கிடந்தார். பின், உடலில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரத்தை துண்டித்தனர்.
தகவலறிந்து வந்த தாழம்பூர் போலீசார், கார்த்திகேயன் இறந்து கிடந்ததை உறுதி செய்தனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், அறையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், 'தனக்கு செய்வினை செய்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.