/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
/
காஞ்சிபுரத்தில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : அக் 22, 2025 11:17 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேலை வாய்ப்பு அலுவலகத்தில், நாளை, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், அக்டோபர் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.
தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். பட்டதாரிகள், டிப்ளமா, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
எனவே, 18 - 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும், விபரங்களுக்கு 044- 2723 7124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.