sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'பார்க்கிங்' ஆக மாறிய கைலாசநாதர் கோவில்

/

'பார்க்கிங்' ஆக மாறிய கைலாசநாதர் கோவில்

'பார்க்கிங்' ஆக மாறிய கைலாசநாதர் கோவில்

'பார்க்கிங்' ஆக மாறிய கைலாசநாதர் கோவில்


ADDED : டிச 31, 2024 01:28 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர், சின்ன நாரசம்பேட்டை தெருவில்,1,200 ஆண்டுகள் பழமை யான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகம், பிரதோஷம், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அப்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானபக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவில் முன், அப்பகுதியை சேர்ந்த சிலர் வாகனங்களை நிறுத்திவருகின்றனர்.

மேலும், இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்களும், கோவில் நுழைவாயில் முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறுஏற்பட்டு வருகிறது.

கோவில் முன் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் முன் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:

கோவில் முன் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இரவுநேரங்களில் கோவில் முன் மின் விளக்குகள் இல்லாததால், இப்பகுதியில்இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

அப்போது, பக்தர்கள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதை தவிர்க்க, கோவில் நிர்வாகத்தினர் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us