/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருத்தணி கோவிலில் காஞ்சி நபர் உயிரிழப்பு
/
திருத்தணி கோவிலில் காஞ்சி நபர் உயிரிழப்பு
ADDED : பிப் 12, 2025 01:54 AM
திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா தாலுகா, திம்மராஜபுரம்பேட்டை, சியாமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 38. இவர், நேற்று காலை மகன் லக் ஷன், 13, என்பவருடன், தைப்பூசத்தையொட்டி, திருத்தணி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு, காஞ்சிபுரத்தில் இருந்து, பேருந்து வாயிலாக திருத்தணிக்கு வந்தார்.
காலை 11:00 மணிக்கு, மலைக்கோவில் செல்வதற்கு, இருவரும் சன்னிதி தெரு வழியாக நடந்து சென்றனர். அப்போது, திடீரென பாபு மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

