sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி

/

சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி

சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி

சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு காஞ்சி மடாதிபதிகள் அருளாசி


ADDED : மே 04, 2025 01:10 AM

Google News

ADDED : மே 04, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கரமடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 1ம் தேதி காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, தேனம்பாக்கம் சிவாஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு பட்டினபிரவேசம் மேற்கொண்டார்.

அன்று இரவு, சிவாஸ்தானத்தில் தங்கிய சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று முன்தினம் அதிகாலை தேனம்பாக்கம் சிவாஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தடைந்தார்.

சங்கரமடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி உத்சவத்தையொட்டி, மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தவானத்தில், மடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தனர்.

இந்நிலையில், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி வி.ஜீவானந்தம் தலைமையில், குழு ஆலோசகர்களான குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் காமேஸ்வர குருக்கள், தமிழகம் இலவச பயிற்சி மைய நிறுவனர் எழிலன்.

பாண்டுரங்க குருசாமி மற்றும் ஆறுமுகம் உள்ளிட்டோர் குழுவினர், நேற்று காலை குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து, சங்கர மடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

பின், சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம், மலர் மாலைகளையும், மலர் கிரீடத்தையும், வஸ்திரங்களையும் வழங்கினர்.

அதை தொடர்ந்து, இரு மடாதிபதிகளும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழுவினருக்கு அருளாசி வழங்கினர்.

இந்நிகழ்வில் சோழன் பள்ளி தாளாளர் முனைவர் சஞ்சீவி ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us