sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரருக்கு உபயதாரர் கிடைக்கவில்லை எளிமையாக நடைபெறும் பிரம்மோத்சவம்

/

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரருக்கு உபயதாரர் கிடைக்கவில்லை எளிமையாக நடைபெறும் பிரம்மோத்சவம்

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரருக்கு உபயதாரர் கிடைக்கவில்லை எளிமையாக நடைபெறும் பிரம்மோத்சவம்

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரருக்கு உபயதாரர் கிடைக்கவில்லை எளிமையாக நடைபெறும் பிரம்மோத்சவம்


ADDED : ஜூலை 04, 2025 01:41 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோத்சவத்திற்கு உபயதாரர்கள் கிடைக்காததால், நடப்பு ஆண்டு பிரம்மோத்சவத்தை கோவில் நிர்வாகம் எளிமையாக நடத்தி வருகிறது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவிலில், நடப்பாண்டு பிரம்மோத்சவம் எந்தவித அறிவிப்பும் இன்றி, ஜூன் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

சுவாமி வீதியுலா நடைபெறாமல், கோவில் பிரகாரத்தில் மட்டும் புறப்பாடு நடக்கிறது.

பல்வேறு வழக்குகளில் சிக்கிய அரசியல் பிரமுகர்களும், அரசு உயர் அதிகாரிகளும், தொழிலதிபர்களும் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் கூறியதாவது:

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவத்திற்கு உபயதாரர் கிடைக்கவில்லை என்ற காரணத்தை கூறி, கோவில் நிர்வாகம் சத்தமின்றி, மிகவும் எளிமையாக கோவிலுக்கு உள்ளேயே பெயரளவிற்கு பிரம்மோத்சவம் நடத்தி வருகிறது.

உபயதாரர் கிடைக்கவில்லை என்றால், இக்கோவிலுக்கு வரும் வருவாயில் இருந்தே பிரம்மோத்சவத்தை விமரிசையாக நடத்தலாம். பக்தர்கள் பலருக்கும் தெரியாமல் மிகவும் எளிமையாக பிரம்மோத்சவம் நடைபெறுவது வேதனையை அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வழக்கறுத்தீஸ்வரர் கோவில் அலுவலர் தீன்ஷா கூறியதாவது:

நடப்பாண்டு பிரம்மோத்சவத்திற்கான உபயதாரர் கிடைக்காததால், உத்சவம் தடைபடக்கூடாது என்பதற்காக எளிமையாக நடத்தி வருகிறோம்.

அடுத்த ஆண்டு உபயதாரர் கிடைக்காவிட்டாலும், ஆணையரிடம் இருந்து அனுமதி பெற்று, கோவில் செலவில் பிரம்மோத்சவம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us