/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வி.ஏ.ஓ., கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
/
காஞ்சி வி.ஏ.ஓ., கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
காஞ்சி வி.ஏ.ஓ., கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
காஞ்சி வி.ஏ.ஓ., கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகள்
ADDED : அக் 27, 2024 12:28 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கான கிராம நிர்வாக நிர்வாக அலுவலகம், டி.கே.நம்பி தெருவில், பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. நுாற்றாண்டை கடந்த இக்கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், மழைக்காலத்தில் கூரை ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. மேலும், கட்டடத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இச்செடியின் வேர்கள் சுவரில் வளர்ந்துள்ளதால் நாளடைவில் கட்டடம் முழுதும் வலுவிழந்து இடிந்து விழும் நிலை உள்ளது. இதனால், இங்கு பணிபுரிவோர் மட்டுமின்றி அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
எனவே, பழமையான கட்டடத்தில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.