/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பழுதடைந்த மணிக்கூண்டு
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பழுதடைந்த மணிக்கூண்டு
ADDED : ஏப் 17, 2024 10:32 PM

பழுதடைந்த மணிக்கூண்டு
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், 1998ல் அமைக்கப்பட்ட மணிக்கூண்டில் இருந்த நான்கு கடிகாரங்களும் பழுதடைந்த நிலையில் இருந்தன.
காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடிகாரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு மூன்று கடிகாரத்துடன் மணிக்கூண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
ஒரு மாதத்திலேயே மணிக்கூண்டில் உள்ள மூன்று கடிகாரங்களும் திசைக்கு ஒரு நேரத்தை காட்டியது. இந்நிலையில் மணிக்கூண்டில் உள்ள கடிகாரத்தின் முகப்பு பகுதி கண்ணாடி உடைந்துள்ளதோடு, அதில் உள்ள கடிகாரத்தின் இயந்திரங்களும் மாயமாகியுள்ளன.
எனவே, நான்கு திசைகளிலும் ஒரே நேரத்தை காட்டும் வகையில், புதிதாக கடிகாரம் அமைத்து மணிக்கூண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.

