/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
ADDED : அக் 10, 2024 12:41 AM

சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள்
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரிஞ்சம்பாக்கத்தில் இருந்து, காரணித்தாங்கல் - வைப்பூர் இணைப்பு சாலை வழியாக, ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் ஏராளமாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் இருப்புறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பாதி சாலையில் படர்ந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, முட்செடிகள் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்கின்றன.
மேலும், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா. சுப்பிரமணியன்,
பேரிஞ்சம்பாக்கம்.