/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : அக் 30, 2024 09:00 PM

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள பஞ்சுகொட்டி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கும் மேலாக ‛மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.
இதனால், காமாட்சியம்மன் கோவில், உலகளந்தபெருமாள் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முத்துகுமார்,
காஞ்சிபுரம்.