ADDED : டிச 04, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் கடவுப்பாதை ஒட்டியுள்ள வையாவூரில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம், மின்கம்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இதில், ரயில்வே கடவுப்பாதை அருகில் உள் ள, ஒரு மின் கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.
இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் சாலை யோ ரம் சேதமான நிலையில் உள்ள மின்கம்பத்தின் மீது லேசாக உரசினாலோ, பலத்த காற்று டன் மழை பெ ய்தாலோ மின்கம்பம் வி ழுந்து மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ஜானகிராமன், காஞ்சிபுரம்.
கான்கிரீட் பெயர்ந்த
மின்கம்பத்தால் விபத்து அபாயம்

