/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 30ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
/
சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 30ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 30ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
சுரகரேஸ்வரர் கோவிலில் வரும் 30ல் குபேரர் அட்சய திருதியை வழிபாடு
ADDED : ஏப் 20, 2025 07:12 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சுரகரேஸ்வரர் கோவில் உள்ளது. குபேர ஸ்தலமான இக்கோவிலில், மூலவர் சன்னிதிக்கு முன், ஐந்தடி உயரத்தில் குபேரர் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சியில் முதன் முதலில், குபேரனுக்கு என, தனி சிலை இங்கு நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள சுரகரேஸ்வரரை பக்தியோடு வழிபட்டால், தீராத ஜூரம் எனப்படும காய்ச்சல் நீங்குவதாகவும், அட்சய திருதியை அன்று, குபேரனை வழிபட்டால், செல்வ செழிப்பிற்கு வழிவகுப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும். அட்சய திருதியை அன்று, குபேரனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி அட்சய திருதியை தினமான வரும் 30ம் தேதி, இக்கோவிலில் குபேரர் அட்சய திருதியை வழிபாடு நடக்கிறது.
இதில், காலை 7:00 மணியளவில் கூட்டு வழிபாடு, சங்கல்பம், மற்றும் அபிஷேகமும், காலை 10:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடக்கிறது.

