/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு
/
குமரகோட்டம் கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : நவ 15, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய செயல் அலுவலராக, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த கேசவன் நேற்று பொறுப்பேற்றார்.
இவர் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில், தேர்ச்சி பெற்று, முதன் முறையாக புதிய செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக குமரகோட்டம் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கதிரவன், புதிய செயல் அலுவலர் கேசவனிடம் முறைப்டி பொறுப்புகளை ஒப்படைத்தார்.