/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்
ADDED : டிச 06, 2024 08:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில், கிராமத்தினர் சார்பில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும் 14ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்படுகிறது.
வரும் 15ம் தேதி காலை 7:30 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்து வருகின்றனர்.