sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்

/

விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்


ADDED : டிச 06, 2024 08:57 PM

Google News

ADDED : டிச 06, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரில், கிராமத்தினர் சார்பில் சுந்தர விநாயகர் மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும் 14ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி கரிகோலம் நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு கணபதி பூஜை, புண்ணியாவசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவையும், இரவு 8:00 மணிக்கு பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றப்படுகிறது.

வரும் 15ம் தேதி காலை 7:30 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், யாத்ரா தானம், கணபதி ஹோமமும், காலை 10:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசங்களுக்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது.

தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹாதீப ஆராதனையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் விழா குழுவினர், அய்யங்கார்குளம் கிராமம், அங்கமுத்து அம்மாள் நகரினர் இணைந்து செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us