/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூன் 01, 2025 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வரதாபுரம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி முத்துமாரியம்மன் சிலை கரிக்கோல ஊர்வலம் மற்றும் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று, காலை 8:30 மணிக்கு சிவாச்சாரியர்கள், கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர். பின், மலர் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.