sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

/

கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : அக் 22, 2024 07:37 AM

Google News

ADDED : அக் 22, 2024 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம்அருகில், நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி, காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

நேற்று, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:00 மணிக்கு விமானத்திற்கும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.

அழிசூர் திரவுபதியம்மன்


உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதிதாக கட்டப்பட்டது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி காலை 8:00 மணிக்கு புதிய சிலைகளுக்கும், விமான கலசங்களுக்கும் கரிகோலம் நடந்தது.

நேற்று, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கும், தொடர்ந்து திரவுபதியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடந்தது.

ஊத்துக்காடு மாரியம்மன்


ஊத்துக்காடு மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

நேற்று, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தின் மீது, சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர்.

பிற்பகல், 12:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us