sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு

/

ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு

ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு

ஏரிக்கரை மணல் மூட்டைகளால் சீரமைப்பு


ADDED : டிச 10, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள அமரம்பேடு ஊராட்சியில் கொளத்துார் ஏரி உள்ளது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 150 ஏக்கர் பரப்பளவு உடையது.

இந்த ஏரியின் கரைப்பகுதி, கடந்த வாரம் பெய்த மழையால் சேதமடைந்தது. கரைப்பகுதியில் உள்ள மணல் படிப்படியாக சரிந்து, கரைகள் வலுவிழந்து காணப்பட்டன. ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படும் என, கிராமவாசிகள் அச்சம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு சென்று, பலமிழந்த ஏரி கரையில் அடுக்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பருவமழை முடிந்த பின், இந்த ஏரியின் கரைகள் முழுமையாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us