/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு 1,500 ஏக்கர் நில எடுப்பு பணி நிறைவு
/
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு 1,500 ஏக்கர் நில எடுப்பு பணி நிறைவு
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு 1,500 ஏக்கர் நில எடுப்பு பணி நிறைவு
பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு 1,500 ஏக்கர் நில எடுப்பு பணி நிறைவு
ADDED : ஜன 01, 2026 04:52 AM
காஞ்சிபுரம்:பரந்துார் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், 1,500 ஏக்கர் கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு தாலுகாக்களில், 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்துார் சுற்றியுள்ள, 20 கிராமங்களில் அமைய உள்ளது. இதில் 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது.
பரந்துார் ஏ, பரந்துார் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்துார், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய 20 கிராமங்கள் இதற்கான இடங்களை வழங்க உள்ளன.
இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும், பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன. பரந்துாரில் விமான நிலையம் அமைவதாக, அறிவிப்பு வெளியானது முதல், இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராமத்தினர் பல கட்ட போராட்டங்களை இப்போதும் நடத்தி வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராமத்தினர், ஏர்போர்ட் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நில எடுப்பு பணிகளை வருவாய் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வருவாய் துறையினர், 21 யூனிட்கள் வாயிலாக தீவிரமாக மேற்கொள்கிறது.
கடந்தாண்டு ஜூலை 9ம் தேதி, பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்தூர் ஆகிய, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர், தங்கள் நிலங்களை, முதன்முதலாக வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி, 12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர், தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்திருந்தனர். அக்டோபர் மாதம் இறுதியில் 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் இறுதியில், 1,500 ஏக்கர் நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர். நிலங்களை வழங்கியவர்களுக்கு 450 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களையும் விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவிக்கின்றனர்.

