/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முன்னாள் படைவீரர்களுக்கு கடனுதவி
/
முன்னாள் படைவீரர்களுக்கு கடனுதவி
ADDED : ஜன 29, 2025 11:56 PM
காஞ்சிபுரம் :'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற திட்டம் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் துவக்க ஒரு கோடி ரூபாய் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், கடனுக்காக செலுத்தும் வட்டியில், மூன்று சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
முன்னாள் படைவீரர்கள், படைவீரரை இழந்த மனைவி, முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள், 25 வயதிற்கும் குறைவான முன்னாள் படைவீரரின் மகன் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
தொழில் துவங்குவதற்கு முன் தொழில்நுட்ப சம்பந்தமாக இலவச பயிற்சி ஏற்பாடும் செய்யப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.