/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'உங்களை தேடி உங்கள் ஊர்' வரும் 16ல் உத்திரமேரூரில்
/
'உங்களை தேடி உங்கள் ஊர்' வரும் 16ல் உத்திரமேரூரில்
'உங்களை தேடி உங்கள் ஊர்' வரும் 16ல் உத்திரமேரூரில்
'உங்களை தேடி உங்கள் ஊர்' வரும் 16ல் உத்திரமேரூரில்
ADDED : அக் 14, 2024 02:02 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.
அக்டோபர் மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமிற்கு, உத்திரமேரூர் தாலுகா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வரும் 16ம் தேதி, உத்திரமேரூர் தாலுகா முழுதும், கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். அன்றுமாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்.
உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.