/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அழிசூர் அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
/
அழிசூர் அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
ADDED : அக் 19, 2024 11:35 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூரில், திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவில் கட்டட பகுதிகள் சிதிலமடைந்ததை அடுத்து, கோவிலை புதிய வடிவில் கட்டமைக்க பகுதியினர் தீர்மானித்தனர்.
அதையடுத்து, ராஜகோபுரம் மற்றும் மண்டபத்துடன்கூடிய கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இக்கோவில் திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நாளை, மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் புதிய சிலைகள் மற்றும் விமான கலசங்களுக்கான கரிக்கோலம் ஊர்வலம் நடைபெற்றது.
நேற்று காலை, மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் புதிய சிலைகள் கண் திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நாளை, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசங்கள் மற்றும் திரௌபதி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.