ADDED : டிச 07, 2024 08:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு, அப்பகுதியினர் நேற்று தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபருக்கு, 60 வயதுக்கு மேல் இருக்க கூடும் என தெரியவந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.