/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத மானாம்பதி கண்டிகை பொது நூலகம்
/
திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத மானாம்பதி கண்டிகை பொது நூலகம்
திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத மானாம்பதி கண்டிகை பொது நூலகம்
திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத மானாம்பதி கண்டிகை பொது நூலகம்
ADDED : ஜூன் 03, 2025 12:49 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கண்டிகை ஊராட்சியில், அந்தோணிபாளையம், மேட்டுபாளையம், சக்கலிபாளையம், மானாம்பதி கண்டிகை ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, மானாம்பதி கண்டிகை கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே, கிராமப்புற நூலகம் இயங்கி வருகிறது.
இந்த நூலகத்திற்கு தினமும் அப்பகுதியைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நூலக கட்டடத்தில், போதிய இடவசதி இல்லாமல் இருந்ததால், வாசகர்கள் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, புதிய நூலக கட்டடம் அமைக்க வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2023 --- 24ம் நிதி ஆண்டில், மத்திய - மாநில அரசு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ், 22 லட்சம் செலவில் புதிய நூலகம் கட்டடம் கட்டப்பட்டு, இரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது.
ஆனால், இதுவரைக்கும் நூலக கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, புதிதாக திறக்கப்பட்ட கிராமப்புற பொது நூலக கட்டடத்தை, விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி செயலர் கூறுகையில், ''புதிதாக திறக்கப்பட்ட நூலக கட்டடத்தில், புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகள் பொருத்தப்படாமல் உள்ளன. அதற்கான பணிகள் முடிந்தவுடன், நூலக கட்டடம் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.