/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குப்பை தொட்டிக்கு செல்லும் மனு பி.டி.ஓ., அதிகாரிகள் அலட்சியம்
/
குப்பை தொட்டிக்கு செல்லும் மனு பி.டி.ஓ., அதிகாரிகள் அலட்சியம்
குப்பை தொட்டிக்கு செல்லும் மனு பி.டி.ஓ., அதிகாரிகள் அலட்சியம்
குப்பை தொட்டிக்கு செல்லும் மனு பி.டி.ஓ., அதிகாரிகள் அலட்சியம்
ADDED : டிச 26, 2024 12:57 AM

உத்திரமேரூர்உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலை, அருணாச்சல பிள்ளை சத்திரம் பகுதியில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தின் வாயிலாக பெருநகர், திருப்புலிவனம், சாலவாக்கம் உட்பட 73 ஊராட்சிகளில், சாலை, குடிநீர் மற்றும் கட்டட வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இங்கு, மத்திய - மாநில அரசுகளின் வாயிலாக, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பானஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஆவணங்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் கீழே போடப்பட்டுள்ளன.
இதனால், ஆவணங்கள்சேதமடைந்து பாழாகும்சூழல் உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறுகோரிக்கைகள் தொடர்பாக, அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக் களும், குப்பை தொட்டி களில் போடப்பட்டுஉள்ளன.
பி.டி.ஓ., அலுவலகத்தில் போதுமான இடவசதி இருந்தும், ஆவணங்களை முறையாக பராமரிக்கஅதிகாரிகள் மெத்தனம்காட்டி வருகின்றனர். எனவே, அலுவலக ஆவணங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

