sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மருதம் ---- மலையாங்குளம் சாலையோரம் ஏற்பட்ட சேதத்தால் விபத்து அபாயம்

/

மருதம் ---- மலையாங்குளம் சாலையோரம் ஏற்பட்ட சேதத்தால் விபத்து அபாயம்

மருதம் ---- மலையாங்குளம் சாலையோரம் ஏற்பட்ட சேதத்தால் விபத்து அபாயம்

மருதம் ---- மலையாங்குளம் சாலையோரம் ஏற்பட்ட சேதத்தால் விபத்து அபாயம்


ADDED : ஜன 08, 2025 09:45 PM

Google News

ADDED : ஜன 08, 2025 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் இருந்து காப்புக்காடு வழியாக மலையாங்குளம் செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையை, சுற்றுப்புற கிராமத்தினர் உத்திரமேரூர், திருப்புலிவனம் பகுதிகளுக்கு, செல்ல பயன்படுத்தி வருகின்றனர். கடந்தாண்டு, இந்த சாலை சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில், காப்புக்காடு பகுதியில் சாலையின் இருபுறமும் மண் கொட்டாமல் விட்டதால், சாலை ஓரத்தில் சேதம் ஏற்பட்டு, ஜல்லிகள் சரிந்து காணப்படுகின்றன.

மேலும், சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளில் எச்சரிக்கை பதாகை வைக்காமலும், மின் விளக்கு வசதி இல்லாமலும் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, மருதம் - மலையாங்குளம் சாலையின், ஓரத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைத்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us