sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்

/

 நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்

 நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்

 நீர்வரத்து கால்வாய் இல்லாத மருதம் பொது குளம்


ADDED : நவ 26, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: மருதத்தில், பொது குளத்தை துார்வாரி நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் தாலுகா, மருதம் கிராமத்தில் உள்ள பொது குளம் அப்பகுதியின் பிரதான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

இக்குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. நீர்பிடிப்பு பகுதி மண்ணால் துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழை நேரங்களில் குறைவான அளவே தண்ணீர் சேகரமாகி வருகிறது.

மேலும், பொதுகுளத்திற்கு நீர்வரத்து கால்வாய் வசதி இல்லாததால், ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, மருதம் பொது குளத்தை துார்வாரி, நீர்வரத்து கால்வாய் வசதி ஏற்படுத்த, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us