/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 21ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
வரும் 21ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : நவ 18, 2025 04:18 AM
காஞ்: சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 21ம் தேதி, நடைபெற உள்ளது என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 21ம் தேதி, காலை 10:30 மணிக்கு, கலெக்டர் வளாக கூட்டரங்கில், நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் துறை அலு வலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர் .
காஞ்சிபுர ம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலா ம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

