sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 'ஆயுள்'

/

சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 'ஆயுள்'


ADDED : நவ 26, 2024 03:57 AM

Google News

ADDED : நவ 26, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில், 7 வயது சிறுமி, 2020ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி, தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, பொன்விளைந்தகளத்துார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காத்தவராயன், 37, என்பவர், சிறுமியை கடத்திச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று நடந்த விசாரணையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கார்த்திக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார்.

அதன்பின், அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us