/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயோரம் சாலை தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
கால்வாயோரம் சாலை தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கால்வாயோரம் சாலை தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கால்வாயோரம் சாலை தடுப்பு சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 28, 2025 04:44 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தும்பவனம் கால்வாயோரம் சேதமடைந்த நிலையில் உள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, அய்யப்பா நகரில் இருந்து, திருப்பருத்திகுன்றம் செல்லும் பிரதான சாலையோரம், மழைநீர் செல்லும் தும்பவனம் கால்வாய் உள்ளது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், ஆழமான இக்கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், கால்வாயோரம் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், இரும்பு தடுப்பின் ஒரு பகுதி சேதமடைந்து சாய்ந்து விழுந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்காததால், தற்போது இரும்பு தடுப்பு, துருப் பிடித்த நிலையில் உள்ளது.
கால்வாயோரம் தடுப்பு இல்லாததால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
தற்போது கால்வாய் நீர் பாசி படர்ந்து உள்ளது.
திருப்பருத்திகுன்றம் பிரதான சாலையில், தும்பவனம் கால்வாயோரம் சாய்ந்த நிலையில் உள்ள இரும்பு தடுப்பை அகற்றிவிட்டு, புதிய தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

