/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மண் அரிப்பால் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 26, 2025 01:33 AM

கீழம்பி:காஞ்சிபுரம் கீழம்பியில் இருந்து, கீழ்கதிர்பூர் வழியாக செவிலிமேடு பாலாறு மேம்பாலத்திற்கு செல்லும் புறவழிச்சாலை உள்ளது. வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து உத்திரமேரூர், வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல், புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் நிறைந்த இச்சாலையில், சர்வதீர்த்தம் -- முசரவாக்கம் நான்குமுனை சாலை சந்திப்பில், மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
புறவழிச்சாலை என்பதால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், மண் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

