sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையோர பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : செப் 04, 2025 03:09 AM

Google News

ADDED : செப் 04, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:பனப்பாக்கம் செல்லும் சாலையோரம் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதால், தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே, பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் வட்டம்பாக்கம் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

சுற்றுவட்டார கிராம மக்கள், இந்த சாலை வழியாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், பனப்பாக்கம் ஏரியையொட்டி 100 மீட்டர் துாரத்திற்கு சாலையோரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது.

இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத் தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பனப்பாக்கம் சாலையோரம் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us