sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : மார் 31, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், சாலமங்கலம் அடுத்த, ஆரம்பாக்கம் சந்திப்பில் இருந்து பிரிந்து ஆரம்பாக்கம், நாவலுார் வழியாக ஆரம்பாக்கம் பிரதான சாலை செல்கிறது.

காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, சிறுவஞ்சூர், உமயாள்பரணஞ்சேரி, நாவலுார் உள்ளிட்ட கிராமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு நாள்தோறும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.

தவிர, இச்சாலை வழியே ஏராளமான தனியார் பள்ளி பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த நவ., மாதம், 'பெஞ்சல்' புயலால் பெய்த கன மழையின் போது, இப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால், இந்த சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதில், தார் சாலை வெள்ள நீரில் சேதமடைந்து, சாலையோரம் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. நான்கு மாதங்களாக சாலையோரம் உள்ள அபாயகர பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

குறிப்பாக, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும், பள்ளி பேருந்துகள் விபத்தில் சிக்கும் அச்சத்துடன் சென்று வருகின்றன.

எனவே, பெரும் விபத்திற்கு முன், ஆரம்பாக்கம் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us