/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 18, 2024 01:41 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நடுத்தெரு வழியாக சாலபோகம், விப்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அருகில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், இரவில் ஒளிபிரதிபலிப்பான் அமைக்கப்படாததாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, ஒளிபிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.