sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 விதிகளை கடைப்பிடிக்காமல் இயக்கும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

/

 விதிகளை கடைப்பிடிக்காமல் இயக்கும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

 விதிகளை கடைப்பிடிக்காமல் இயக்கும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி

 விதிகளை கடைப்பிடிக்காமல் இயக்கும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 25, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் தெளித்தல் உள்ளிட்ட விதிகளை கடைப்பிடிக்காமல் இயக்கும் கனரக வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஏராளமான கல் குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்குகின்றன.

மதுார், சிறுதாமூர் மற்றும் பினாயூர் சுற்றுவட்டாரத்தில் இ யங்கும் இத்தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள் பழவேரி சாலை மற்றும் திருமுக்கூடல் பாலாற்று பாலம் வழியாக நாள் முழுக்க இயங்குகிறது.

இந்த வாகனங்களால் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்துள்ளது. இதனால், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் சுற்றியுள்ள கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கடந்த மாதம் நவ., 28ம் தேதி, சாலவாக்கம் போலீசார் முன்னிலையில், கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், பொது மக்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு பேச்சு நடைபெற்றது.

இதில், விபத்துகளை தடுத்து சாலை பாதுகாப்பை உறுதிபடுத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தார்ப்பாய் மூடாமல் இயக்குதல், புழுதி பறக்கும் சாலைகளில் தண்ணீர் தெளித்தல் உள்ளிட்டவையும் அடங்கும்.

ஆனால், இந்த விதிகளை கடைபிடிக்காமல் கனரக வாகனங்கள் இயங்குவதால் எம்.சாண்ட் உள்ளிட்டவை சாலைகளில் கொட்டி புழுதி பறக்கும் பிரச்னை தொடர்கிறது.

மேலும், திருமுக்கூடல் பாலாற்று பாலம் மீது மின்விளக்கு வசதி ஏற்படுத்துவதான வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கல் குவாரி உரிமையாளர்கள் அலட்சிய போக்கில் உள்ளனர்.

எனவே, சாலவாக்கம் போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சின்படி, விதிகளை கடைபிடித்தலை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us