sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 27, 2025 02:32 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக மாறியுள்ள, சரளா நகர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட 12 மற்றும் 14ம் வார்டுகளில், சரளா நகர், தேவா நகர், விக்னேஷ் நகர், பிரியங்கா நகர், சரோஜினி நகர், ஜெமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

இப்பகுதியினர் சரளா நகர் பிரதான சாலை வழியே சென்று வருகின்றனர். இந்த நிலையில், பாதாள சாக்கடை பணிக்கு குழாய் பதிக்க, எட்டு மாதத்திற்கு முன், சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இதனால், சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுது.

இதையடுத்து, சேதமான சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. இதனால், தற்போது சாலை படுமோசமாக மாறியுள்ளது.

போக்குவரத்திற்கே லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக சாலை உள்ளதால், அப் பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மழை பெய்யும் போது, சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமான சாலைகளை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us