sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஷேர் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள் அவதி

/

ஷேர் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள் அவதி

ஷேர் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள் அவதி

ஷேர் ஆட்டோக்களால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : பிப் 09, 2024 11:06 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் - அய்யன்பேட்டை, காஞ்சிபுரம் - ஓரிக்கை, காஞ்சிபுரம் - கீழம்பி, காஞ்சிபுரம் - ஏனாத்துார் ஆகிய பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிறுத்தம் அல்லாத பகுதிகளில், ஷேர் ஆட்டோக்களை தாந்தோன்றி தனமாக நிறுத்தி விட்டு, ஆட்டோ ஓட்டுனர்கள் பயணியரை ஏற்றி செல்கின்றனர். சில நேரங்களில், கல்லுாரி மாணவியருக்கு காத்திருக்கவும் செய்கின்றனர்.

காஞ்சிபுரம் டி.கே., நம்பி தெரு, வெங்குடி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில், ஒன்றன் பின் ஒன்றாக ஷேர் ஆட்டோக்களை நிறுத்துகின்றனர்.

இதனால், இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பிற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

மேலும், ஆட்டோக்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போது, மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் பயணிக்கின்றனர்.

எனவே, ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களின் அடாவடியான செயல்களை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us