/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இடிந்து விழும் நிலையில் குளக்கரை சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
இடிந்து விழும் நிலையில் குளக்கரை சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
இடிந்து விழும் நிலையில் குளக்கரை சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
இடிந்து விழும் நிலையில் குளக்கரை சுவர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : அக் 28, 2025 11:44 PM

காஞ்சிபுரம்: இடிந்து விழும் நிலையில் உள்ள காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளத்தின், சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில் சர்வதீர்த்த குளம் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பரா மரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு 45 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவருடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குளத்தின் வடகிழக்கு பகுதியில், சாலையோரம் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால், பெரிய அளவில் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச் சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

