/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையில் மண் குவியல் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : பிப் 19, 2025 12:55 AM

ஸ்ரீபெரும்புதுார்:வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக கீழச்சேரி செல்லும் நெடுஞ்சாலை, 18 கி.மீ., துாரம் கொண்டது. வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, தண்டலம் -- அரக்கோணம் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், இச்சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவத்து அதிகம் உள்ள இச்சாலையில், சுங்குவார்சத்திரம் அருகே, சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக மண் குவியல் உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மண் குவியலில் சிக்கி, நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை அகற்றி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.