sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்

/

அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்

அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்

அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்


ADDED : ஏப் 13, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நடவாவி உத்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நடவாவி உத்சவம் இன்று நடக்கிறது.

உத்சவத்தையொட்டி உபயநாச்சியாருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நேற்று இரவு, மேனா பெட்டியில் எழுந்தருளி அய்யங்கார்குளம் கிராமத்திற்கு புறப்பட்டார்.

இன்று, காலை 6:00 மணிக்கு புஞ்சையரசந்தாங்கலில் மண்டகப்படி நடக்கிறது.

துாசி வைகுண்டநாதர் கோவிலில் 12:00 மணியளவில் சுவாமிக்கு மரியாதை நிகழ்ந்ததும், அங்கிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பாடாகி, மாலை 4:00 மணியளவில் அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலா சென்று, இரவு 7:00 மணியளவில், சஞ்சீவிராயர் கோவிலில் எழுந்தருளும் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

இரவு 9:00 மணியளவில் சஞ்சீவிராயர் கோவிலில் இருந்து, நடவாவி கிணற்றுக்கு செல்கிறார். கிணற்றில், பத்தி உலாத்தல், பூஜைகள் நடைபெற்றபின், கிணற்றில் இருந்து எழுந்தருளி புஞ்சையரசந்தாங்கல் வழியாக பாலாற்று பந்தலில், இரவு 10:00 மணிக்கு எழுந்தருள்கிறார்.

அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், பிரம்மாராதமன், நிவேதனம், பூஜைகளுக்குப் பின், பாலாற்றில் குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.






      Dinamalar
      Follow us