sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்

/

அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்

அதிகாரிகளை முற்றுகையிட்ட நாகப்பட்டு கிராம பெண்கள்


ADDED : அக் 08, 2024 12:53 AM

Google News

ADDED : அக் 08, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதி நிலம் அரசு நிலமாகும்.

தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தி வருகிறது. நேற்று, பரந்துார் ஊராட்சி, நாகப்பட்டு கிராமத்திற்கு நிலம் அளவீடு செய்ய வருவாய் துறையினர் சென்று உள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், எங்களுக்கு சொந்தமான நிலங்களை அளக்க விடமாட்டோம் என, வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், நாகப்பட்டு கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர். அதிகாரிகளும், வேறு ஒரு நாளில் அளந்து கொள்ளலாம் என, புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us