/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்
/
பாலதர்ம சாஸ்தாவிற்கு நவநதிநீர் அபிஷேகம்
ADDED : நவ 09, 2024 10:02 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு, பாலதர்ம சாஸ்தா கோவிலில், 7வது ஆண்டு உற்சவம், நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று, காலை 10:30 மணிக்கு கொடி மரத்திற்கும், பாலதர்ம சாஸ்தாவுக்கும் நவநதிநீர் அபிஷேகமும், மஹா தீபாராதனையும், மாலை பால விநாயகர், பாலமுருகர் வீதியுலாவும் நடந்தது.
இன்று, காலை 8:00 மணிக்கு ஆகாய கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பால்குட ஊர்வலமும், காலை 10:15 மணிக்கு ஓம்ஸ்ரீ ராஜகுபேரர் சித்தர், பாலதர்ம சாஸ்தாவுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்.
மாலை 6:15 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், பாலதர்ம சாஸ்தாவுக்கு வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.
நாளை, காலை 9:15 மணிக்கு சங்கல்பமும், தொடர்ந்து, சுதர்சன ஹோமம், பாலதர்மசாஸ்தாவுக்கு 1,008 சஹஸ்ரநாமம் உள்ளிட்டவையும், மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
நாளை மறுநாள், காலை 8:00 மணிக்கு கொடி மரம் மற்றும் பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.