/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
/
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
தடை செய்யப்பட்ட இடங்களில் அடாவடி கடைகளால் நெரிசல் வருவாய் கிடைப்பதால் நடவடிக்கையில் அலட்சியம்
ADDED : ஏப் 01, 2025 11:58 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோவில் நிறைந்த நகரம் என்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். காந்தி சாலை, காமராஜர் சாலை, நான்கு ராஜவீதிகள் போன்ற சாலைகள் விசாலமாக இருந்தாலும், சாலையோர கடைகளுக்கு செல்லும் மக்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையோர கடை வியாபாரிகளிடம், தினசரி வாடகை வசூலிப்பதற்கு குத்தகை எடுத்தவர்கள் பணம் வசூலிக்கின்றனர். இதனால் கடை வியாபாரிகள் வாடகை செலுத்துகிறோம் என கூறி, மக்கள் கூடும் இடங்களில் கடைகள் வைப்பதால், தள்ளுவண்டியை நிறுத்துவதாலும் பொது மக்களுக்கு இடையூறாக மாறுகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டும் என, நகரவாசிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மாநகராட்சியில், சாலையோர கடைகள் நடத்த தடை செய்யப்பட்ட இடம் என, சில இடங்கள் வரையறை செய்யப்படும் என, கடந்த 28ல் நடந்த, மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாநகராட்சியில் சாலையோர கடைகள் நடத்த தடை செய்யப்பட்ட இடம் என, ஏற்கனவே பல இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், மாநகராட்சியின், முக்கிய சந்திப்புகள், வாகன நெரிசல் மிகுந்த இடம் என, சாலையோர கடைகள் நடத்த அனுமதியில்லாத பல இடங்களில், இன்றைக்கு கடைகள் ஏராளமாக முளைத்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில், 1,100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக, இந்த கடைகள் வாயிலாக, வருவாய் கிடைப்பதால், சாலையோர கடைகள் மீது மாநகராட்சி கரிசணம் காட்டுவதாக புகார் எழுகிறது.
மாநகராட்சிக்கு, 50 ரூபாய் முதல் கட்டணம் செலுத்துவதால், எங்கு வேண்டுமானாலும் கடை நடத்துவோம் என, சில சாலையோர வியாபாரிகள் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். பேருந்து நிலையம் வாசலில் இருந்து உள்ளே வரை, காய்கறி, எலக்ட்ரானிக் பொருள் என, அனைத்து கடைகளும் பாதையை அடைத்து இயங்குகின்றன.
தடை செய்யப்பட்ட இடங்களில் சாலையோர கடைகள் மீது தீவிர நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும் என, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

